வரதட்சணை கொடுமையால் குழந்தைகள் முன்பு தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்… தாய் இறந்தது கூட தெரியாமல்… பார்த்து பார்த்து கதறிய உறவினர்கள்..!!

By Soundarya on ஐப்பசி 17, 2025

Spread the love

தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி (25) என்ற பெண், 5 வருடங்களுக்கு முன்பாக இஸ்லாவத் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அவர் கர்ப்பிணியாக உள்ள நிலையில், கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். தாய் இறந்ததை கூட அறியாமல் இருந்த அந்த குழந்தைகளைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.