2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவார் என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (PK) ஆலோசனை வழங்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமாஜ்வாதி கட்சியுடனான தற்போதைய கூட்டணியை முறித்துக் கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியுடன் (BSP) புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் ராகுல் காந்திக்கு யோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பிரசாந்த் கிஷோரின் இந்த அரசியல் ஆலோசனையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சமாஜ்வாதி கூட்டணியை முறிப்பதற்கோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைவதற்கோ விருப்பம் காட்டவில்லை என்று அந்த செய்தித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
