சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் மக்களைக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் . தொடர் மின்வெட்டால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நியாயம் கேட்கத் தங்களது பகுதி சட்டமன்ற உறுப்பினரின் (MLA) வீட்டிற்குச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது எம்.எல்.ஏ வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு நபர், “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” என்று கூறியுள்ளார். இதனை நம்பி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர், ஆனால் உண்மையில் வெளியில் வந்து பொய் சொன்னதே அந்த எம்.எல்.ஏ தான் என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் . தேர்தலின் போது வேட்பாளரின் முகத்தைப் பார்த்து வாக்களித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றும் அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.