இரண்டு போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்து பிரதீப் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரல்.. பின்ன சிங்கம் – புலி ஆச்சே..

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 40 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன்  வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப்.

   

வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தற்பொழுது வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இவர் திரும்பவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டது. எனினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இணையத்தில் தான் பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் என்று பார்த்தால், பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் இந்த பிரச்சனை நடைபெற்றது. அர்ச்சனா,  விசித்ரா,  தினேஷ் மூவரும் பிரதீபுக்கு ஆதரவாக பேசி மாயா gang எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அர்ச்சனா, விசித்ரா இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்தவாறு பிரதீப்பை பற்றி பேசுகின்றனர்.

அதில் விசித்ரா அவன் ‘எனக்கு ஸ்ட்ரீம் பண்ணிக் கொடுத்தான்’ என்று கூறுகிறார். அதே போல் அர்ச்சனா அவர் ‘என்னை தங்கச்சின்னு சொன்னாரு’ என்று கூற இப்படி இருவரும் பிரதிப்பை பற்றி நல்லவிதமாக பேசுகின்றனர். இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் பதிவு செய்து பிரதீப்புக்கு ஆதரவாக வெளியிட்டிருந்தார். இந்த பதிவிற்கு  ஹார்டின் இமோஜியை பதிவு செய்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த பதிவானது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு….