மாஸ் பட்ஜெட் படத்தில் கமிட்டான பிரதீப் ரங்கநாதன்.. கோடிகளில் சம்பளத்தை கொடுக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்..!!

By admin on சித்திரை 7, 2024

Spread the love

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து பிரதீப் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதரின் மார்க்கெட் வேல்யூ அதிகமானது.

   

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு, கௌரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

   

 

இந்த ஆண்டுக்குள் எல்ஐசி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் சுமார் 5000 கோடி ரூபாய் செலவில் கோலிவுட்டில் 12 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படமும் ஒன்று. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் மைத்திரி மூவி மேக்கர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.