விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நி7கழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி.இந்நிலையில், அவர் பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார், கதவை பூட்டாமல் பாத்ரூம் உபயோகம் செய்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுதொடர்பான புகார் கமல் ஹாசன் வரை சென்ற நிலையில், அவர் தற்போது ரெட் கார்ட் மூலமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்நிலையில், பிரபலங்களும், ரசிகர்களும், விஜய் டிவி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களும், பதிவுகளும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் பிக் பாஸிற்கு செல்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்பொழுது இவர் ‘ நீங்க என பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்புனீங்கன்னா. ரெண்டு பேருக்கு ரெட் கார்ட் கொடுப்பேன். அப்புறம் அந்த வாரத்தோட கேப்டன் நான்தான்’ என்றும் விஜய் டிவிக்கு ஆர்டர் செய்யும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் ‘பார்த்து செய்யுங்க’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…
Romba sarpana pullingala ala dhan adhu mudiyum ????@EndemolShineIND if you are considering sending me in, I want two red cards to send off 2 contestants who conspired against me and I want to be the Captain – 7th week of BB7 ⭐
https://t.co/MhTwRzhT0E#PaathuSeinga #GamerLife— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023