பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 43 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் ரெட் கார்டுடன் ‘இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்ற அவப்பெயருடன் வெளியேற்றப்பட்டவர் தான் போட்டியாளர் பிரதீப்.
வீட்டில் உள்ள சக ஹவுஸ்மேட்களால் டார்கெட் செய்யப்பட்டு, கமலஹாசனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் பலரும் இணையத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இப்படி இணையத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார் பிரதீப். அவரும் தன் பங்குக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இணையத்தை சூடாக வைத்துள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று கமலஹாசன் பிக் பாஸ் வீட்டில் bully gang-ஐ விமர்சிப்பது போல பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ஷோ ஒளிபரப்பாகும் போது ஷோவில் அப்படி எதுவும் இல்லை, ரெட் கார்டு கொடுத்ததில் தனது தவறு எதுவுமே இல்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே அவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்பொழுது கமலஹாசனை விமர்சித்து வருகின்றனர்.
தற்போது நெட்டிசன்கள் மாயா , பூர்ணிமா , ஐஷு Bully gang-ஐ ட்விட்டரில் மேலும் கேள்வி எழுப்பி வறுத்தெடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி கமல்ஹாசனையும் விமர்சித்து அதிகம் பேர் பதிவு செய்து வருகின்றனர். நேற்று வந்த ப்ரோமோக்களை பார்த்த போது அவர்களுக்கு சரவெடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறாரார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல பிரதீப் விவகாரத்திலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் தற்பொழுது கமலை பலவாறு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Happy diwali to all of you. ரொம்பலாம் யோசிக்காதீங்க. நான் ஜாலியா தான் இருக்கேன். போயி பட்டாசு வெடிக்குறதுனா வெடிங்க. கறி குழம்பு சாப்பிடுங்க. Life என்ஜாய் பண்ணுங்க. உங்க சப்போர்ட் எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க. Love you all” என்று தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…
தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…