தமிழகச் சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே, தற்போது இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிவிக்க உள்ளார். சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதல்வர் விஜய் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பைச் சட்டசபையில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே புனித ஜார்ஜ் கோட்டையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் தேவை என்பதினாலும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
