Categories: சினிமா

அட்லீயை நான் உருவகேலி செய்தேனா…? பூதாகரமாக வெடித்த சர்ச்சைக்கு பதில் அளித்த பிரபலம்…

Spread the love

அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். தற்போது பான் இந்தியா அளவில் பிரபலமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. பின்னர் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து விஜயுடன் இணைந்து மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் வெற்றி பெற்றது. அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் தாண்டி சாதனை படைத்தது. அதனால் பாலிவுட்டிலும் அட்லியின் மார்க்கெட் எகிறி விட்டது என்று சொல்லலாம். தற்போது அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் எடுக்க போவதாக அதற்காக அட்லீ தயாராகி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அட்லீ இயக்கிய தெறி திரைப்படம் வெற்றி பெற்றதால் பேபி ஜான் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் அட்லீ. அதில் கபில் ஷர்மா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் அட்லீ கலந்து கொள்ளும்போது சினிமாவை பற்றி அவரிடம் கேட்கும் போது லைட்டா உருவகேலி செய்வதுபோல் கபில் ஷர்மா கேட்டிருக்கிறார். அதற்கு அட்லீயும் நெத்தியடி பதிலாக இங்கு உருவம் முக்கியம் இல்ல நல்ல திறமையும் மனதும் இருந்தால் போதும் என்று பதில் அளித்து இருக்கிறார். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

தற்போது அந்த சர்ச்சைக்கு இன்று பிரபல தொகுப்பாளரான கபில் ஷர்மா தனது பதிவு மூலம் பதில் அளித்திருக்கிறார். நான் அட்லீயை உருவகேலி செய்தேனா? அந்த நிகழ்ச்சியில் நான் அப்படி எதுவும் குறிப்பிடவில்லையே நன்றாக பார்த்துவிட்டு அதற்கு பிறகு பேசுங்கள் என்று ன்னிடத்தில் தவறு இல்லை என்பது போல கூறியிருக்கிறார் கபில் ஷர்மா.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago