BIGGBOSS முடிந்த கையோடு கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய பூர்ணிமா… மனம் கலங்கி நின்ற தருணம்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதலே சண்டைக்கு பஞ்சம் இல்லாத இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் நெட்டிசன்களால் அதிகம் ரோல் செய்யப்படும் வந்தது. இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை,, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

   

இவர்களில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பாவா செல்ல துரை அவராகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நன்றாக சென்று கொண்டிருந்த  இந்நிகழ்ச்சியில் ஒரு புயல் அடித்தது. அதுதான் பிரதீப் ரெட் கார்டு விவகாரம். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வெடித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.

இதில் அர்ச்சனா, தினேஷ் இருவரும் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.  இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை அறிய தற்பொழுது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இறுதி போட்டியில் மொத்தம் 5 போட்டியாளர்கள் மட்டும் தான் நுழைய முடியும்.  இதனால் கடந்த வாரம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் பணப்பெட்டி கொண்டுவரப்பட்டது. பணத்தின் மதிப்பு ஏற ஏற இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பூர்ணிமா தனது குடும்பத்தினரை சந்தித்ததோடு அதன் பிறகு அவர் சமீபத்தில் இறந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த அவர்களின் சமாதி இடத்திற்கு சென்று ஆரத்திக்காட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…