‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 270 கோடியை தண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழு திருப்திபடுத்தியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3150 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானாவிலும் நல்ல வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 270 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வார இறுதிக்குள் 500 கோடி வசூலை எட்டி விடும் எனவும் கூறப்படுகிறது.