தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியாவது இந்த முறை தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார். இதனால் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அதேசமயம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து பல வாக்குறுதிகளையும் இபிஎஸ் அள்ளி வீசி வருகிறார். தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் தீபாவளிக்கு பெண்களுக்கு தரமான செயலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
