இன்று ஆடி அமாவாசை… வீட்டில் எதெல்லாம் செய்ய வேண்டும்?, எதெல்லாம் செய்யக்கூடாது?… இதை விவரம்….!

By Nanthini on ஆடி 24, 2025

Spread the love

வருடம் முழுவதும் மாதம் தோறும் அமாவாசை வந்து செல்கிறது. ஆனால் எல்லா அமாவாசைகளை போல ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை கிடையாது. இன்றைய நாட்கள் இறந்தவர்களுக்கு மிகவும் உகந்த நாட்களாகும். இதில் நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அதனைப் போலவே வீட்டிலும் சில நடைமுறைகளை நாம் பின்பற்றுவது அவசியமாகும்.

அதன்படி ஆடி அமாவாசை நாளில் வாசலில் கோலமிடக்கூடாது. வீட்டை சுத்தம் செய்யவோ, சமையலறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்யவோ கூடாது. முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வெளி ஆட்களை வீட்டிற்கு வரவழைத்து உணவளிக்கக்கூடாது. காகத்திற்கு சாதம் வைத்த பிறகுதான் பித்ருகளுக்கு படையல் இடவேண்டும். நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக்கூடாது.

   

நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது.   பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.ஆடி அமாவாசை படையல் என்பது நம்முடைய முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது என்பதால் நைட்டி நோன்ற உடைகள் அணிந்து சமைக்கக் கூடாது. புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைப்பதும், விளக்கேற்றுவதும் நல்லது.