நாள் முழுவதும் உழைக்கக் காத்திருந்தும் ஒரு வாடிக்கையாளர் கூட வராமல், ஒரு ரூபாய் கூட வருமானமின்றி அந்த காலணி பாலிஷ் செய்யும் தொழிலாளி மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தார். அவரது வறுமையையும் ஏமாற்றத்தையும் கவனித்த அங்கிருந்த ஒரு காவலர், அந்த ஏழைத் தொழிலாளிக்கு உதவ முன்வந்தார். ஆனால், உதவியை பிச்சையாகக் கொடுக்க விரும்பாத அவர், வேண்டுமென்றே தனது காலணிகளையும் இடுப்புப் பட்டையையும் (Belt) மண்ணில் தேய்த்து அழுக்காக்கினார். பின்னர், அவற்றைச் சுத்தம் செய்யும்படி அந்தத் தொழிலாளியிடம் கொடுத்து, அதற்கான கூலியை வழங்கி அவரது அன்றாடப் பிழைப்பிற்கு வழிவகை செய்தார்.
जब एक पॉलिश करने वाले मजदूर को पुरे दिन खाली बैठे हो गए और कुछ कमाई नहीं हुई
तब एक पुलिस वाले भैया ने अपने जूते तथा बेल्ट मिट्टी से गंदे करके उसको साफ करने के लिए दिया ताकि उसकी मजदूरी निकल जाए।
जहां पुलिस पर एक भ्रष्टाचार का आरोप लगाया जाता है वह पुलिस वाले इंसानियत का कार्य… pic.twitter.com/GZ2liIadie
— Argumentorr (@Mountain4u) April 7, 2026
காவல்துறையினர் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற புகார்கள் ஒருபுறம் கூறப்பட்டாலும், இது போன்ற மனிதாபிமானச் செயல்கள் காவல்துறையின் மீதான மரியாதையை உயர்த்துகின்றன. ஒரு ஏழைத் தொழிலாளியின் சுயமரியாதை பாதிக்கப்படாமல் அவருக்கு உதவிய அந்த காவலரின் செயல், அவர் வளர்ந்த பண்பான சூழலையும் நற்பண்புகளையும் பறைசாற்றுகிறது. இந்த உலகில் எளியவர்களுக்குத் துணையாக நிற்பதே மிகப்பெரிய புண்ணியம் என்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
