தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு(SIR) எதிராக தமிழக வெற்றிக் கழகம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடக்கும் பகுதிகளில் தவெகவினர் பந்தல் அமைத்துள்ளனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி, பந்தல் அமைக்க அனுமதி கிடையாது என்று கூறி அதனை அகற்றினர். இன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் அருகே தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
