“உன் மனைவியோடு நான்” வெளிநாட்டிலிருந்து அடிக்கடி வந்த போன் கால்… பயந்து போன கணவர் எடுத்த முடிவு..!!

By Soundarya on ஆனி 7, 2025

Spread the love

கேரள மாநிலம் நெல்லிகுணத்தைச் சேர்ந்தவர் ரிஜோ. இவர் திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் அவருடைய நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் மிரட்டி வந்த புகாரில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளார்கள். அதாவது ரிஜோ வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இந்தியாவிற்கு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்தே போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இதற்கு முன்பாக காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில்  லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதாவது ரிஜோ முன்பாக  திருமணம் செய்வதற்காக பெண்ணோடு பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம்  நடந்துள்ளது.

அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்த பிறகும் ரிஜோ அவரை தொடர்ந்து வீட்டுக்கு சென்று மிரட்டி வந்துள்ளார். பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற அவர் அங்கிருந்து அந்தப் பெண்ணின் கணவருக்கு போன் மூலமாக தொடர்பு கொண்டு உன்னுடைய மனைவி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன். உன்னுடைய மனைவியுடன் நான் தவறான உறவில் இருந்தேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் தொடர்  அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்  காவல்துறையினர் ரிஜோவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில் தான் தற்போது விமான நிலையத்தில் கைதாகி உள்ளா.ர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.