பிரபல திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கவிதையில் கூறியிருப்பதாவது, இன்று உலகத் தாய்மொழித் திருநாள். மொழி என்பது ஒலிக்கருவி அல்ல; உயிரி ஏன் காக்க வேண்டும் மொழியை? அது காலம் சேமிக்கப்பட்ட கலம். மரபு – வரலாறு மருத்துவம் – பண்பாடு கலை – இலக்கியம் விழுமியம் – பெருமிதம் முதலானவற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் ஆவண வாகனம்.
ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால் தான். ஒரு மொழி பேசும் கடைசி மனிதனின் குழியில் மொழியும் சேர்த்தே புதைக்கப்படுகிறது. தமிழர்கள் நிறையப் பிள்ளை பெறுங்கள் அருள்கூர்ந்து தாய்மொழியில் பேசுங்கள்; எழுதுங்கள் தயவுசெய்து தாய்மொழியில் திட்டுங்கள். தனித்தமிழில் உரையாடுகிறவனை விசித்திர விலங்காய்ப் பார்க்காதீர்கள்; அவன்தான் மொழியின் கடவுக் கடவுள்.
அதிகார மையங்களில் புழங்காமல், அரசியலின் கதகதப்பு இல்லாமல், தாய்மொழி வழிக்கல்வி தழைக்காமல், அறிவியல் கருவிகளை ஆளாமல் தழைக்காது தாய்மொழி ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இது அச்சடித்த எச்சரிக்கை தாய்மொழி புழங்குக; தாய்மொழி வழங்குக; எவ்வினத்திலும் தாய்மொழியே விளங்குக என்று தனது பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…