இன்று நடிகர் கமல்ஹாசனை கவிஞர் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சந்தித்துள்ளார். அதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் வைரமுத்து கூறியிருப்பதாவது, நாளாயிற்று. நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன். நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார்.
அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம். “செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா” என்றார். “செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்; ஆனால் அதில் ஜீவன் இல்லை” என்றேன். அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். “நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்” என்றேன். டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன். மகிழ்ந்து விடை கொண்டேன் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.
