தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என மும்முறமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதனுடைய அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் பாமக இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து பாமக கட்சி நிர்வாகிகள் கூறுகையில், பாமக கட்சியானது அன்புமணியிடம் இருக்கிறது. அவரிடம் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றனர். மேலும், பாஜக கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்றால், 30 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்கீடுவேண்டும் என அன்புமணி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
