தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் இல்லத்தில் வைத்து பாமக எம்எல்ஏ சதாசிவம் அவரை சந்தித்து பேசினார். அதன்பிறகு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சதாசிவம், முன்னாள் கூட்டணி தலைவர், வருங்கால கூட்டணி தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு மேலும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தோம் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த சந்திப்பின் மூலம் பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தேர்தல்களாக திமுக…
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில்…
தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயர்த்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பாமக வரவேற்கிறது.…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள் தனது 103-வது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…