காலையில் கூட்டணியை அறிவித்த அன்புமணி… மாலையே ஷாக் கொடுத்த ராமதாஸ்… பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அன்புமணி தரப்பு பாமக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதிமுகவுடன் கூட்டணியை அன்புமணி உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணி உடன் அல்லது வேறு எவரிடமும் எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த இயலாது. மருத்துவர் ஐயா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.

   

அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்டவிரோதம். கட்சியை விதிமுறையின்படி மருத்துவர் ஐயா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என்று கூறி அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் 2026 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 9 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.