தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் NDA கூட்டணியில் பாமக மீண்டும் இணைந்துள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னையில் இபிஎஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், NDA கூட்டணியில் மீண்டும் பாமக இணைந்துள்ளதாகவும் பாமகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையும் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாகவும் கூறியுள்ளார்
