நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 21வது தவணையான 2000 ரூபாயை விவசாயிகளுக்கு நேற்று பிரதமர் மோடி விடுவித்தார்.
ஆனாலும் சில விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்து 1800-180-1551 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் kisanemitra.gov.in என்ற அரசின் இணையதளத்தில் தமிழில் பதிவிட்டு பிரச்சினைகளை அறியலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
