திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் (28) என்ற வாலிபர் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மணிகண்டன் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் தாய் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் படிக்கும் வயதில் மாணவி கர்ப்பம் ஆக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
