கோவாவிலிருந்து டெல்லிக்குச் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 9:16 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டது. ஆனால், விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் இயந்திரத்தில் திடீர் பழுதடைவு ஏற்பட்டது. இதனைக் கண்ட விமானி உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, விமானத்தை யூ-டர்ன் செய்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திருப்ப முடிவு செய்தார்.
விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமான நிலைய நிர்வாகம், உடனடியாக உஷார்படுத்தப்பட்டு காலை 9:25 மணிக்கு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானியின் திறமையான வழிகாட்டுதலும் துரித நடவடிக்கையும் விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றின.
https://twitter.com/pulsenewsbreak/status/2094779471635284385/video/1
எந்தவித அசம்பாவிதமும் இன்றி, கோவா விமான நிலையத்தில் காலை 9:50 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்தபோது விமானத்தில் மொத்தம் 229 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
