தினமும் வெறும் 100 ரூபாய் போதும்… நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்…. போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்….!

By Nanthini on மாசி 4, 2026

Spread the love

நிம்மதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சேமிப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு மோசடிகள் பெருகி வரும் நிலையில், சாமானிய மக்களும் நம்பி முதலீடு செய்யக்கூடிய இடமாக அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் திகழ்கின்றன. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்புடன் லாபகரமான வருமானத்தையும் உறுதி செய்கின்றன.

அந்த வகையில், அஞ்சலகத்தின் ‘தொடர் வைப்பு நிதி’ திட்டம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் ஒரு நபர் தினமும் வெறும் 100 ரூபாய் மட்டும் சேமித்தால் போதுமானது. மாதத்திற்கு 3,000 ரூபாய் என்ற கணக்கில் இந்த முதலீட்டைத் தொடரலாம். அஞ்சலகம் இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது பல வங்கி சேமிப்புகளை விடச் சிறப்பானதாகும்.

   

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) ஆகும். தினமும் 100 ரூபாய் வீதம் நீங்கள் மாதம் 3,000 ரூபாயைச் சேமித்து வந்தால், ஓராண்டில் உங்கள் சேமிப்பு 36,000 ரூபாயாக உயரும். தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த முதலீட்டைத் தடையின்றி மேற்கொண்டு வரும்போது, நீங்கள் செலுத்திய மொத்த அசல் தொகை மட்டும் 1,80,000 ரூபாயாக இருக்கும்.

   

ஐந்து ஆண்டுகளின் முடிவில், உங்கள் அசல் தொகையுடன் சேர்த்து வட்டி வருவாயாக மட்டும் சுமார் 34,097 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தத்தில், 5 வருடங்கள் கழித்து உங்கள் கையில் 2,14,097 ரூபாய் முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும். சிறுகச் சிறுகச் சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, ஒரு பெரிய தொகையை லாபத்துடன் பெறுவதற்கு இந்த அஞ்சலகத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.