பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… இரவோடு இரவாக வெளியான புதிய அறிவிப்பு…!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் (IOC), மாநிலம் முழுவதும் போதுமான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பல இடங்களில் கேன்களில் பெட்ரோலை வாங்கிச் சேமிப்பது அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் தேவையின்றி பதற்றமடைய வேண்டாம் என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, பாதுகாப்பற்ற முறையில் எரிபொருளை வீடுகளில் சேமித்து வைப்பது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், வதந்திகளை நம்பி அளவுக்கு அதிகமாக எரிபொருளை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.