தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தச் செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திச் செவிலியர்கள் 5-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, உரியத் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே 3,783 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், 3,614 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது காலியாக உள்ள 169 பணியிடங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…