அஜித்தை வச்சி படம் பண்ணப்போறேன்-விஜய்யிடம் சென்று அனுமதி கேட்ட பேரரசு! அதுக்கு தளபதி சொன்ன பதில் என்ன தெரியுமா?

By Arun

Published on:

தமிழ் சினிமாவில் பல கமெர்சியல் இயக்குனர்கள் வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பேரரசு திரைப்படங்களுக்கு என்றே அதிக வரவேற்பு இருந்தது. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஊர் பெயர்களை கொண்டே இருக்கும்.

அவர் முதன்முதலில் இயக்கிய “திருப்பாச்சி” திரைப்படம் 100 நாட்கள் மேல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. முதல் திரைப்படமே தாறுமாறு ஹிட் என்பதால் இரண்டாம் திரைப்படத்திலும் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது.

   

இவ்வாறு அவர் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கிய “சிவகாசி” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஏவிஎம் நிறுவனமே பேரரசை தேடி வந்ததாம். “எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தாருங்கள். அஜித்தை வைத்து” என்று கூறியிருக்கிறார்கள்.

விஜய்யை வைத்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் ஹிட் கொடுத்த பேரரசுவை விஜய் இயக்குனர் என்றே முத்திரைக்குத்தி வைத்திருந்தார்களாம். இந்த நிலையில் பேரரசு நேராக விஜய்யிடம் சென்று “ஏவிஎம் நிறுவனத்தினர் என்னை அஜித் படத்தை இயக்க அழைக்கின்றனர். நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாராம்.

அதற்கு விஜய், “உடனடியாக படத்தை ஒத்துக்கிட்டு டைரக்ட் பண்ற வழியை பாருங்க” என்று கூறினாராம். அதன் பின் “திருப்பதி” திரைப்படத்தின் தொடக்க விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளாரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

author avatar