தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ஒரு அரிய திட்டத்தை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு 3 நாள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாக்கு பேருந்து வசதி, தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டி சேவைகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு, சென்னையில் இருந்த புறப்பட்டு, சனிக்கிழமை காலை கொடைக்கானலை சென்றடையலாம். அங்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ரெடியாகி உணவருந்தி விட்டு, பில்லர் ராக் தளத்தை சுற்றிப்பார்க்க செல்லலாம். பின் மதிய உணவு சாப்பிட்டு, பசுமை பள்ளத்தாக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு, கோக்கரஸ் வாக் பகுதியில் ஜாலியாக ஷாப்பிங் செய்யலாம். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டலுக்கு சென்று, இரவு உணவு உண்ணலாம்.
பின் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை உணவு சாப்பிட்டு, ஹோட்டலில் இருந்து செக்-அவுட் செய்யலாம். பின் கொடைக்கானல் ஏரியில் போட்டிங் செய்து விட்டு, சில்வர் கேஸ்கெட் அறிவிக்கு செல்லலாம். அங்கு மதிய உணவு சாப்பிட்டு, சென்னைக்கு புறப்படலாம். செல்லும் வழியில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும். திங்கட்கிழமை காலை 6:00 மணி அளவில் சென்னையை வந்தடையலாம்.
சென்னை-கொடைக்கானல், 3 நாள் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட் கட்டணம், ஒருவருக்கு ரூ.7300. இதை www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாகவும், 1800 4253 1111 என்ற தொடர்பு எண் வாயிலாகவும் புக் செய்யலாம்.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…