“என் மார்பில் அடித்துவிட்டு ஓடிவிட்டான்”… பெற்றோர் கண் முன்னே ரயில்வே ஸ்டேஷனில்… “பூ” பட நடிகை பகிர்ந்த பகீர் ரகசியம்….!

Spread the love

பிரபல தென்னிந்திய நடிகை பார்வதி திருவோத்து, தனது சிறுவயதில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழில் ‘பூ’, ‘மரியான்’, ‘தங்கலான்’ போன்ற திரைப்படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் எப்போதும் முன்னணியில் இருப்பவர். ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது சிறுவயதில் ரயில் நிலையத்தில் தந்தை மற்றும் தாயுடன் இருக்கும் திடீரென ஒருவர் வந்து என் மார்பில் அடித்துவிட்டு ஓடிவிட்டார். அது வெறும் தொடுதல் அல்ல. கடுமையான வலியை ஏற்படுத்தியது. அன்று என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. மிகவும் பயந்துவிட்டேன் என பார்வதி கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்ட பார்வதி, சாலையில் நடக்கும்போது ஆண்களின் கைகளைக் கவனித்து நடக்க வேண்டும் என்று தனது தாய் தற்காப்புக்காகக் கற்றுக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். ஒரு தாய் தன் மகளுக்கு இத்தகைய எச்சரிக்கைகளைக் கற்றுக் கொடுக்கும் சூழல் நிலவுவது வேதனையளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தனது 17 வயதில் தனக்கு நன்கு தெரிந்த ஒரு நபரால் ஏமாற்றப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதையும் அவர் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். அன்பு என்ற பெயரில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களைப் புரிந்துகொள்ள தனக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பார்வதியின் இந்தத் துணிச்சலான வெளிப்பாடு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் உச்சத்திலிருக்கும் ஒரு நடிகை, தனது கடந்த கால வலிகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது, இதே போன்ற பாதிப்புகளைச் சந்தித்த பல பெண்களுக்கு ஒரு தைரியத்தையும் விழிப்புணர்வையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Nanthini

Recent Posts

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை… மார்ச் 31-க்குள் e-KYC முடிக்காவிட்டால் பொருட்கள் கட்…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்…

2 minutes ago

பெரும் பயங்கரம்..! கடற்கரையில் தொங்கவிடப்பட்ட 5 மனித தலைகள்… போதைப்பொருள் கும்பல் மோதலால் அதிரும் நாடு..!!

தென்மேற்கு ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது கொடூரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் உச்சகட்டமாக,…

12 minutes ago

“இது நல்லதல்ல” இந்தியாவுக்கே அவமானம்… “கேட்வே “அருகே கடலில் குப்பைகளைக் கொட்டிய நபர்… வீடியோ எடுத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி…!!

மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கேட்வே ஆஃப் இந்தியா' அருகே, நபர் ஒருவர் சாதாரணமாகக் கடலில் குப்பைகளைக் கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

26 minutes ago

“யார் மிரட்டினாலும் வீடியோவை நீக்கமாட்டேன்” ஸ்விக்கி ஊழியர் ரயில் விபத்து… ஆதாரத்தை அழிக்க சதி..?… மர்ம நபர்களின் மிரட்டலுக்கு யூடியூபர் பதிலடி…!!

ரயிலில் இருந்து ஸ்விகி டெலிவரி ஊழியர் விழுந்த விவகாரத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் பிஜய் ஆனந்த் தனக்கு கடும்…

31 minutes ago

“அவன் தான் வேணுமா உனக்கு” நகைகளை எடுத்துக்கொண்டு காதலனோடு ஓடிய மனைவி… போலீஸ் முன்பாகவே சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பாலி காவல் நிலையத்திற்குள், நபர் ஒருவர் தனது மனைவியைப் பின்னால் இருந்து சுட்டுக்கொன்ற…

37 minutes ago

BREAKING: ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி..!!

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களைத் தொடர்ந்து, தற்போது சத்துணவு ஊழியர்களும் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்காகப் போராட்டக்…

47 minutes ago