தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்தவர் சரவணன். “பொண்டாட்டி ராஜ்ஜியம்”, “மாமியார் வீடு”, “தாய் மனசு” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சரவணன் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து “பருத்திவீரன்” திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. இந்த நிலையில் சரவணனிடம் ஒரு பேட்டியில், “பருத்திவீரன் படத்தில் கிடைத்த பெயரை நீங்கள் தக்கவைத்துக்கொண்டீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த சரவணன், “இல்லை, அந்த படத்திற்குப் பிறகு பல இயக்குனர்கள் என்னை பருத்திவீரன் செவ்வாழை கதாபாத்திரம் போன்றே பெரிய மீசையோடு நடிக்க சொன்னார்கள். மீண்டும் மீண்டும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இதன் காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை இழக்க வேண்டியதாக ஆயிற்று” என்று சரவணன் பதிலளித்தாராம்.
“பருத்திவீரன்” திரைப்படத்தில் சரவணன் ஏற்று நடித்த செவ்வாழை என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. மேலும் அந்த கதாபாத்திரம் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாகவும் ஆனது. ஆனால் “பருத்திவீரன்” திரைப்படத்திற்குப் பிறகு சரவணன் நடித்த எந்த கதாபாத்திரமும் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் சோகம்.
சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…
ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…