பெங்களூருவில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும், தங்களின் குற்றத்தை மறைக்க ஒரு நாடகமாடியுள்ளனர். குழந்தை தற்செயலாக படுக்கையிலிருந்து கீழே விழுந்துதான் உயிரிழந்தது என்று கூறி அனைவரையும் நம்ப வைக்க முயன்றனர்.
இருப்பினும், குழந்தையின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தையின் உடலில் கடுமையான உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டது. பெற்றோரின் சண்டைக்கு அப்பாவிக் குழந்தை பலியான இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தந்தை ஷெக்கப்பா மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…