கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசல், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் சிதைத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி, விஷ்ணு என்ற இரண்டு வயது சிறுவன் மூச்சுத்திணறி தனது பெற்றோரின் கைகளிலேயே உயிரிழந்தான்.
மேலும் மகனை இழந்த ஆறாத வடுவிலிருந்து மீளாத அந்தப் பெற்றோருக்கு, 13 வயதுடைய அவர்களது மகள் மட்டுமே ஆறுதலாக இருந்தாள். ஆனால் விதியின் சதி அந்த மகளையும் விட்டுவைக்கவில்லை. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட கடுமையான உட்காயங்கள் காரணமாக ஒரு மாத காலமாக மரணத்துடன் போராடி வந்த அந்தச் சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஒரே மாத இடைவெளியில் தங்களது இரு பிள்ளைகளையும் பறி கொடுத்த அந்தக் குடும்பம் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை விளக்கும் விரிவான கள ஆய்வு அறிக்கை விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2026-ல் நிகழும் புதன் பகவானின் இந்த முப்பெரும் மாற்றங்கள், ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக…
கனடாவின் சாலை ஒன்றில் நடந்த விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு தெருவிளக்கு கம்பத்தில் அந்தரத்தில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…