Categories: சினிமா

‘என்னை முதல் முதலாக நம்பிய ஹீரோ பாண்டியராஜன் சார்தான்’ … நன்றி சொல்லி நெகிழ்ந்த மணிரத்னம்!

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே  மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.

கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.

இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். அதனால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தின் 175 ஆவது நாள் விழா நடந்தபோது அதில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

ஆண்பாவம் படக் காட்சி

அப்போது அவர் “எனக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில் பாண்டியராஜன் சாரிடம் சென்ற ஒரு தயாரிப்பாளரிடம், நான் உங்களுக்குப் படம் பண்ணவேண்டும் என்றால் மணிரத்னத்தை இயக்குனராக நியமியுங்கள். அவர் அதற்கு சம்மதம் சொன்னால் நான் உங்களுக்குப் படம் பண்ணுகிறேன் என்று சொன்னார். அந்த நன்றிக்காகதான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்” என்று பேசினாராம்.

ஏனென்றால் அப்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பகல் நிலவு மற்றும் இதயக் கோவில் ஆகிய இரு திரைப்படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மௌன ராகம் படம் இன்னும் ரிலீஸாகி இருக்கவில்லை. ஆனால் அப்போதே மணிரத்னத்தின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என பாண்டியராஜன் நினைத்துள்ளார்.

vinoth

Recent Posts

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

2 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

12 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

22 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

42 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

55 minutes ago