‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ கதிர் – முல்லை இவர்கள் தானா…? முல்லையாக களமிறங்கும் ‘கதாநாயகி’ போட்டியாளர் இவரா …?

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.

   

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வந்தது.  சமீபத்தில் சீரியல் இறுதி நாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குழுவினரும் இணைந்து கேக் வெட்டி, கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசன் விரைவில் வரும் என்றும் தகவல்கள் வெளியானது.   தற்போது விஜய் தொலைக்காட்சி  உறுதிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் ‘ ஸ்டாலின் முத்து அப்பாவாகவும் அவரின் மனைவியாக நிரோஷாவும் நடிக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ‘பிள்ளைகளை வளர்த்தா என்னைப் போல வளர்க்கணும்’ என்கிறார் அப்பா ஸ்டாலின். இவ்வாறு ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதைப்பார்க்கும் பொழுது அப்பாவுக்கும் மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளது போல தெரிகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சமீபத்தில் விஜய் டிவியில் நிறைவடைந்த ‘கதாநாயகி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாலினி நடிக்க இருக்கிறார். அதே போல ஷாலினி கதாபாத்திரத்தில் ஆகாஷ் பிரேம் குமார் நடிக்க இருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர்.