நடனக்குழுவில் ஆடிய பெண்ணை தனக்கு ஜோடியாக்கி வீடு வாங்கி கொடுத்தார் – நடிகர் கவுண்டமணி குறித்து பகீர் கிளப்பிய பயில்வான்

By Sumathi

Updated on:

தமிழ் சினிமாவில் மிக மூத்த கலைஞராக மதிக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. வயது 80களை கடந்துவிட்ட நிலையில், சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். எனினும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை, 49 ஓ உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்தார். தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் காமெடி ஜோடிக்கு பிறகு, மற்றொரு ஜோடி இதுவரை இணையவில்லை என்று சொல்லலாம். அதே போல் இப்போதும் பழைய படங்களாக இருந்தாலும் அவர்களும் இணைந்து நடித்த காமெடி காட்சிகளை விரும்பி ரசிக்க முடியும். குறிப்பாக சின்னக்கவுண்டர், கரகாட்டக்காரன், ஊருவிட்டு ஊருவந்து என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

   

சமீபத்தில் நடிகர் கவுண்டமணி குறித்து பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் கவுண்டமணி வீட்டில் 7 கார்கள் வாங்கி நிறுத்தியிருக்கிறார். முதன்முதலில் மாருதி காரை அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அறிமுகப்படுத்திய போது, தமிழ் சினிமா நடிகர்களில் முதலில் அந்த காரை வாங்கியவர் கவுண்டமணிதான்.

வாசுகி, கோவை சரளா, சச்சு, வாசுகி என சில நடிகைகளை கவுண்டமணி தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். குறிப்பாக வெள்ளைத்தோல் கொண்ட பெண்கள் என்றால் கவுண்டமணிக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் மனோரமா மீது மட்டும் மிகுந்த மரியாதையாக நடந்துக்கொள்வார். அவர் மட்டுமே கவுண்டமணியை என்னய்யா கவுண்டா, வாய்யா என்று ஒருமையில் பேசுவார். பல படங்களில் மனோரமாவுக்கு ஜோடியாக, மருமகனாக கவுண்டமணி நடித்திருக்கிறார்.

நடிகை ஷர்மிலி, ரஜினி, கவுதமி நடித்த தர்மதுரை படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனக்குழுவில் ஒரு டான்சராக நடனமாடிக்கொண்டு இருந்தவர். அந்த தர்மதுரை படத்தில் நானும் நடித்திருந்தேன். அவரை காமெடி நடிகையாக்கிய பெருமை கவுண்டமணியை தான் சேரும். கவுண்டமணி நடித்த படங்களில் தனக்கு ஜோடியாக ஷர்மிலியை நடிக்க வைத்தார். ரங்கராஜபுரத்தில் ஷர்மிலிக்கு சொந்தமாக பிளாட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று கவுண்டமணியின் அந்தரங்கம் குறித்த பல விஷயங்களை இந்த வீடியோவில் வெளிப்படையாக சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi