#image_title
பிரபல நடிகர்களின் பழைய படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் தளபதி விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் 25 நாட்களை கடந்து ஓடிய கில்லி படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் மக்களிடையே பிரபலமாக பேசப்படுகிறது.
ஏ.ஆர் ரகுமான் இசையில் படையப்பா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படையப்பா படத்தை சத்யா நாராயணா, விட்டல் பிரசாத், பி.எல் தேனப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த நிலையில் தேனப்பன் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்வது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார்.
வேட்டையன் படபிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருந்தார். அங்கு சென்ற தேனப்பன் பல விஷயங்கள் பற்றி பேசி உள்ளனர். அப்போது தேனப்பன் படையப்பா ரீ ரிலீஸ் குறித்தும் பேசி உள்ளார். அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ரஜினிகாந்த் தாராளமாக செய்யுங்கள் என கூறியுள்ளார்.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. பாசத்திலும், நட்பிலும், மரியாதையிலும், துளியும் அவர் குறையவில்லை, அப்படியேதான் இருக்கிறார் என தேனப்பன் புகழாரம் சூட்டியுள்ளார். விரைவில் படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…