BREAKING: “போய் வருகிறோம்”… தமிழக அரசு வழக்கறிஞர்கள் கூண்டோடு ராஜினாமா… கோட்டையில் பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 8, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு மற்றும் அதன் பல்வேறு முகமைகளில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வழக்கமாகப் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், ஆளுங்கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்பவும், சட்ட விவகாரங்களை முன்னெடுத்துச் செல்லவும் அக்கட்சியின் ஆதரவு பெற்ற வழக்கறிஞர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனினும், நீதிமன்றப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, புதிய வழக்கறிஞர்கள் முறைப்படி நியமிக்கப்படும் வரை அடுத்த ஒரு வார காலத்திற்குத் தற்போதைய வழக்கறிஞர்களே பணியைத் தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை மாற்றமானது நீதித்துறை நிர்வாகத்தில் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகப் பார்க்கப்படுகிறது.