தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொது மற்றும் வேளாண் வரவுசெலவுத் திட்டங்கள், புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்கவும் அமைச்சர்களுக்கு அவர் சில கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, லஞ்சப் புகார்களில் சிக்கி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, பாரபட்சமின்றி உடனடியாக அவர்களது பதவிகள் பறிக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், அமைச்சர்கள் அரசுப் பள்ளிகள் அல்லது இதர அரசுத் துறைகளுக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று, அங்கிருக்கும் ஊழியர்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாகப் பள்ளி வளாகங்களுக்குள் சென்று சமூக வலைத்தளங்களுக்கான ‘ரீல்ஸ்’ மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற தேவையற்ற விளம்பரச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தடை விதித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பொறுப்பறிந்து, நிர்வாக ஒழுங்குடனும், மக்கள் சேவையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் இக்கூட்டத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…