பெரும் பரபரப்பு.! அந்த விஷயத்தில் போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. என்ன செய்வது..? கலக்கத்தில் விஜய்… தவெகவில் வெடித்த புது சர்ச்சை..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பான ஆய்வுக்கான டெண்டர் கோரப்பட்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார்மயமாக்குவதற்கான முதற்கட்டப் படிநிலை என்று சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், இந்த டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் தவேக அரசுக்கு, இடதுசாரிகளின் இந்தத் திடீர் எதிர்ப்பு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்படுவதாகக் கூறி, இடதுசாரி கட்சிகளின் இந்த எதிர்ப்புக்குத் தவேக தலைவர் விஜய் தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தவேக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.