Categories: சினிமா

‘ஒரு நைட் முழுக்க ஜெயில்ல இருந்தேன்’.. அதுக்கப்புறம் தான் என் லைப்பே மாறுச்சு.. ஷாக்கிங் தகவலை பகிர்ந்த ‘மகாராஜா’ பட நடிகர்..!

Spread the love

அடிக்கக்கூடாத நபரை அடித்த காரணத்தினால் ஒரு நாள் முழுவதும் ஜெயிலில் இருந்ததாக பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பாலிவுட்ல மிகப்பெரிய இயக்குனராக வளம் வருபவர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான one to one என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்நிலையில் பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் அனுராக் காஷ்யப். அந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியிருந்தார். அதில் ஜெயில் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருந்த அவர் “ஆம் நான் ஜெயிலில் இருந்திருக்கின்றேன்.

யாரை அடிக்க கூடாதோ அவர்களை அடித்ததனால் நான் ஜெயிலுக்கு போனேன். ஒரு நாள் இரவு முழுவதும் ஜெயிலில் இருந்தேன். நான் தப்பான ஆள் மீது கைய வச்சுட்டேன். யாரை அடிச்சுட்டு ஜெயிலுக்கு போனேனோ அவர்னால தான் என்னோட வாழ்க்கை மாறுச்சு. அவர்தான் என்னை ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு, நான் இப்ப இப்படி இருக்கேன்னா அதற்கு அவர்தான் காரணம்” என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த நபர் யார் என்பதை அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை கூறியவுடன் அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர். தற்போது நடிகர் அனுராக் காஷ்யப் பேட் காப் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகின்றார். இந்த வெப் சீரியஸ் டிஸ்ட்ரி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியிருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

15 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

15 minutes ago

ஐயோ பாவம்… கல்லூரிப் பேருந்து மோதி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 3 மாணவிகள் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…

25 minutes ago

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

36 minutes ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

1 மணத்தியாலம் ago

விஜய் தான் அடுத்த பிரதமரா?…. “என்னை சிக்கல்ல மாட்டி விடாதீங்க”…. செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் அலறிய அமைச்சர் செங்கோட்டையன்….!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…

1 மணத்தியாலம் ago