தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பஸ்கள் பயணக் கட்டணத்தை பெருமளவு உயர்த்தியுள்ளன. குறிப்பாக மதுரைக்கு ₹3,000 வரையிலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு ₹3,500 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமம் (Permit) ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
