பொதுவாகவே ஒரு திரைப்படம் என்பது ரீலீஸ் செய்யப்படுவது என்பது அரிதான. அதுவும் ஹவுஸ்புல் என்பது மிகவும் அரிதான விஷயம். ஆனால் ஒரு திரைப்படம் 550 முறைக்கு மேல் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அத்தனை முறையும் ஹவுஸ் ஃபுல் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. 80 மற்றும் 90 காலகட்டத்தில் நிறைய ஆங்க்ரி யங் மேன் படங்கள் வெளியாகி ஹீரோயிசத்தை வளர்த்துக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் தான் ஹிந்தியில் ராம் கோபால் வருமா இயக்கிய சத்யா என்ற திரைப்படம் வெளியானது. மும்பையின் நிழல் உலகம் மற்றும் மாஃபியாக்கள் பற்றி பேசிய திரைப்படம் தான் இது. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் புதுப்புது கேங்ஸ்டர் சினிமாக்கள் உருவாகின.

அந்த படம் கன்னடத்தில் உருவான படம் தான் “ஓம்”. 1995 ஆம் ஆண்டு வெளியான ஓம் படத்தை கன்னட திரை உலகின் கல்ட் இயக்குனரும் நடிகருமான உபேந்திரா இயக்கி இருந்தார். அதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவராஜ் குமார் ஓம் படத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்தார். கன்னடா சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கல்ட் கிளாசிக் என இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து இன்று வரை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வீதம் சுமார் 550-க்கும் மேற்பட்ட முறை ரீலீஸ் ஆகி வருகின்றது.

பெங்களூரில் உள்ள கபலி என்ற திரை அரங்கில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 30 முறை ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் வெளியிடப்படும் போது ஹவுஸ் ஃபுல் ஆகி உள்ளது. கோவில் பூசாரியின் மகன் சத்யா ஒரு பெண்ணின் மீதான காதலால் வாழ்க்கை தடம் மாறி ரவுடியாக மாறுகின்றார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை. அதுவரை வந்த கன்னட சினிமாக்களிலேயே கர்நாடகாவின் நிழல் உலக சாம்ராஜ்ஜியத்தை நிஜத்திற்கு நிறையவே நெருக்கமாக காட்டி இருந்த திரைப்படம் தான் இது.

பல தடைகளைக் கடந்து 1995 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கன்னடா சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற பல சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கன்னட மாநில சினிமா விருதுகளை வென்றுள்ள இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய்க்கு தனியார் சேனல் ஒன்றுக்கு ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டது. 20 ஆண்டுகால பழைய படம் ஒன்று இத்தனை கோடிக்கு விலை போனது அதுவே முதல் முறையாகும்.
