அட இவர்கள்தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கம்பன் மீனாவின் மகன் மற்றும் மருமகளா?…வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ….

By Begam

Published on:

பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பன் மீனாவின் மகன் மற்றும் மருமகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தாய்மார்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக பாக்கியலட்சுமி வேடத்தில் நடிப்பவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் பெண் தனது குழந்தைகளையும்  கணவனையும் எவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் என்பதை இந்த கதை மிக அழகாக எடுத்துரைக்கிறது.

   

இந்த சீரியல் ஹீரோ கோபிநாத்துக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒன்று பாக்கியலட்சுமி இன்னொருவர் ராதிகா. தற்பொழுது இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. பாக்யா வீட்டு வேலைக்காரப் பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில்  நடிப்பவர்தான் கம்பன் மீனா. இவர் தனது சிறப்பான நடிப்பினை இந்த சீரியலில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் .

இவர் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இந்த இரண்டு சீரியல்களுமே தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இவர் தனது சூட்டிங் தவிர மற்ற நேரங்களில் தன் குடும்பத்துடன் தான் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவருடைய மகன் தன் குடும்பத்துடன் இணைந்து கார்த்திகை தீபம் ஏற்றிய புகைப்படங்களை, அவருடைய கணவர் தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அவர்களின் புகைப்படங்கள்…