“இதை கொஞ்சம் பாரு” சக பெண் ஊழியர்களின் எண்களை திருடி… இளைஞர் செய்த மோசமான செயல்… டெலிகாலர் நிறுவனத்தில் நடந்த அசிங்கம்…!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள டெலிகாலர் நிறுவனத்தில் பணிபுரிந்த அர்ஷத் சித்திக்கி (25) என்பவர், தனது முன்னாள் பெண் சக ஊழியர்களுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயது இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். பணியில் இருந்தபோது சக ஊழியர்களின் தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்ட அர்ஷத், பின்னர் அவர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இவர் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல், மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இது போன்ற ஆபாசமான வீடியோக்களை அனுப்பி மனரீதியாகத் துன்புறுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.