தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் பல கட்சிகளும் இந்த கட்சிகளுடன் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றன. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஈ பி எஸ் இந்த தேர்தலை குறிவைத்து பல வியூகங்களை வகுத்து வருகின்றார். இதனிடையே அதிமுக மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் இ பி எஸ் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். இப்படியான நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் நேற்று அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது.
இதனிடையே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்த பிறகு இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், எங்கள் கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என்று கூறிவிட்டார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ஓபிஎஸ், நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். தை பிறக்கும் வரை பொறுமையாக இருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு சென்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…