நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா சாஸ்திரி பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ‘சம்திங் சம்திங்’ என்கின்ற பெயரில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தெலுங்கில் நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. தமிழில் நடித்திருந்த நடிகை திரிஷா தான் தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஜெயம் ரவிக்கு பதிலாக சித்தார்த் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தவர் தான் அர்ச்சனா சாஸ்திரி. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான தப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா என்ற திரைப்படத்தில் திரிஷாவின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான பிக் பாஸ் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு நடிகை இவரால் வர முடியவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த அவர் தன் சினிமா வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். மேலும் நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா திரைப்படத்தில் நான் தோழி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் எனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. திரிஷாவுக்கு தோழியாக நடித்த பிறகு என் மார்க்கெட் அப்படியே குறைந்துவிட்டது. அதற்கு பிறகு நான் பெரியளவு திரைப்படங்களில் நடிக்கவே இல்லை என்று அந்த பேட்டியில் ஓப்பனாகவே பேசி இருப்பார். இப்படி இவர் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.