தமிழகத்தில் பொதுமக்கள் அனீமியா (இரத்த சோகை), விட்டமின் ஏ மற்றும் பி12 குறைபாடுகளால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி, விட்டமின் ஏ மற்றும் விட்டமின் டி சத்துக்கள் நிறைந்த சமையல் எண்ணெய் ஆகியவை பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த இந்த முக்கிய வாக்குறுதியைச் செயல்படுத்துவது குறித்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தற்போது அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆரோக்கிய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் இத்திட்டங்கள், தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அதிரடி ஆலோசனையைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் விநியோகத் தேதிகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
