தோழி வீட்டுக்கு சென்ற நர்ஸ்… காளான் சூப்பை குடித்ததும் அடுத்து நடந்த பயங்கரம்… கதிகலங்கிய சென்னை…!

Spread the love

சென்னையில் சக செவிலியருக்குக் காளான் சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, 6 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய செவிலியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர், தனது சக ஊழியரான நான்சி நிஷா என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது நான்சி நிஷா உபசரிப்பாக வழங்கிய காளான் சூப்பை அருந்திய சுனிதா, சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட நான்சி நிஷா, சுனிதா அணிந்திருந்த விலையுயர்ந்த தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளார்.

மயக்கம் தெளிந்து வீட்டிற்குச் சென்ற பின்னரே தனது நகை காணாமல் போனதை உணர்ந்த சுனிதா, இது குறித்துக் காவல்துறையில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணையில், நான்சி நிஷா திட்டமிட்டு சூப்பில் மயக்க மருந்து கலந்து நகையைத் திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், திருடப்பட்ட நகையை மீட்டனர். விசாரணையில், நான்சி நிஷா ஏற்கனவே மற்றொரு செவிலியரிடமும் இதேபோன்று கைவரிசை காட்டி கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கைக்குரிய சக ஊழியரே இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago